கேரள முஸ்லிம் சமூகத்தின் தெளிவான அரசியல் பயணித்தலால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளம் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது..
அரசின் உயர் பதவிகளான மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளில் செயலாளர் பதவியை திறம்பட நிர்வகித்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் திருப்தியான சேவை செய்து வருகின்றனர்...
ஆலப்புழா மாவட்ட
ஆட்சியராக டாக்டர் ஆதிலா அப்துல்லாஹ்,
கொல்லம் மாவட்ட
ஆட்சியராக பி.அப்துல் நாசிர்,
மலப்புறம் மாவட்ட
ஆட்சியராக ஜாஃபர் மாலிக் ஆகியோர்
குறைந்த வயதில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கலெக்டர் பதவியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..
கேரள அரசின் கனவுத் திட்டமான கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த
முகமது ஹனீஸ் ஐஏஎஸ் தற்போது கேரள அரசு தொழில்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார்..
மேலும்
கேரள கல்வித்துறை
செயலாளராக ஏ.ஷாஜகான் ஐஏஎஸ் ,
ஜி.எஸ். டி
இயக்குனராக ஒய். ஷபீறுல்லாஹ் ஐஏஎஸ் ,
சுசித்ர மிஷன் திட்ட இயக்குனராக மீர் முகமது ஐஏஎஸ்
ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..
கேரள அரசின் பல்வேறு துறைகளில் கூடுதல் செயலாளர் பொறுப்பில்
எஸ். ஷானவாஸ் ஐஏஎஸ் , அஷ்ரப் அலி ஐஏஎஸ் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்...
@ Colachel Azheem.
Comments
Post a Comment