மின்சார குறைபாடுகளை சரிசெய்ய கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு - நாள் - 02 ஜூலை 2020 (இடம் -ஆர் எஸ் மங்கலம்)
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
👉 மின்வாரிய துறை சம்பந்தமான புகார் கடிதம் நமது ஊர் உதவி பொறியாளர் இடம் கொடுக்கப்பட்டது.
👉நாம் கொடுத்த மூன்று கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையான B & C பகுதிகளில் ரீடிங் எடுப்பதற்கு ஏற்கனவே பணியாளர் நியமித்து விட்டோம் என்று கூறிவிட்டார்கள்.
👉முதல் கோரிக்கையான இரவு நேர பணியாளர் நியமனம் செய்வது சம்பந்தமாக அடுத்த வாரத்திலிருந்து தினமும் ஒரு நபரை நான் இரவு தங்க வைக்கிறேன் என்று உறுதி கூறி இருக்கிறார்கள்.
👉 இரண்டாவது கோரிக்கையான பகல்நேர மின்தடையை சரி செய்வதற்கு மூன்று தொலைபேசி எண்கள் கொடுத்திருக்கிறார்கள் இந்த தொலைபேசி எண்கள் இன்னும் சிறிது நேரத்தில் நமது தளத்தில் இமேஜ் பார்மட்டில் பதிவிடப்படும்.
👉நம் கோரிக்கை அனைத்தையும் ஏற்று செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்து இருக்கக்கூடிய உதவி மின் பொறியாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.
👉மேலும் அல்லாஹ்வின் கிருபையால் நமது ஊரில் உள்ள மின்சாரம் சம்பந்தமான ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக எனக்கு சுட்டிக்காட்டி தாருங்கள் நான் அதனை ஒவ்வொன்றாக சரி செய்து ஆர்.எஸ். மங்கலம் நகர் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான எந்தவித பிரச்சினை இல்லாமல் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.
👉 நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்....


Good
ReplyDelete