இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த வட்டார மருத்துவ அலுவலர் திருமதி சுகந்தி போஸ் மீது கொடுக்கப்பட்ட புகாரும் எடுக்கப்பட்ட நடவடிக்கையும்
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாக ஆகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் தரம் உயர்த்த படாமலேயே உள்ளது. அவசரகால மருத்துவ வசதிகள் கூட இல்லாத ஆரம்ப சுகாதாரநிலையம் ஆக உள்ளது.
மேலும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்கள் சிகிச்சை பெற வரும் மக்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பேசி, மரியாதை குறைவாக நடந்து கொள்வதால் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
அடிப்படை வசதி மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருத்துவம் பார்க்க முடியாதநிலையில் 35கிமீ தொலைவில் இருக்கும் இராமநாதபுரத்திற்கு செல்ல வேண்டி உள்ளத்தால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டு அதிக உயிரிழப்பை சந்தித்து இருக்கிறோம்.
எனவே ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாரதார நிலையத்தை அனைத்து வதசிகளுடன் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி மேலும் கொரானா சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் வழிவகை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் அவர்கள் கொரோனா எனும் பெரும் தொற்றை ஒழிப்பதற்காக பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், இதுபோன்ற அரசு மருத்துவர்களின் செயல்கள் இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எனவே ஆர்.எஸ்.மங்கலம் தலைமை மருத்துவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்சம் இடமாற்றம் செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.












Comments
Post a Comment