மரியாதைக்குரிய ஆர்.எஸ். மங்கலம் தாலுகா வட்டார மருத்துவ அலுவலர் திருமதி முனீஸ்வரி MBBS அவர்களுக்கும் மற்றும் வட்டாட்சியர் திரு முருகவேல் அவர்களுக்கும்
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
இக் கொரோனா பேரிடர் காலத்தில் ஆர்.எஸ்.
மங்கலம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்வதற்காக எவ்வித
தனியார் மருத்துவமனைகளும் செயல்படாத நிலையில் இருந்தது.
எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையை அறிந்து
பொதுமக்கள், ஜமாத் பிரமுகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் தங்களிடம் தனியார்
மருத்துவமனைகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையை
கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்து தற்போது ஆர்.எஸ். மங்கலத்தில் 2
தனியார் மருத்துவமனைகள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.
இத்தகைய மக்கள் நலன் காக்கும் பணியை
நாங்கள் மனதார பாராட்டி தங்களுக்கு
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தாங்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்
அனைவரும் கொரானா தொற்றை கட்டுபடுத்துவதற்கு சிறப்பாக களப்பணி ஆற்றுகிறீர்கள்.
மேலும் நீங்கள் நீண்ட ஆயுளுடனும் மேலும் பல மக்கள் நலப்பணிகள் ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்..
Comments
Post a Comment