Skip to main content

Posts

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ரூபாய் 10,000 மானியம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ரூபாய் 10,000 மானியம்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி

தமிழக அரசின் ஆணைப்படி, தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.  இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை அசல் வைத்துள்ள நபர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு  வருகிறது. பணம் வழங்கும் பட்டியலில் பெயர் இருந்தும், ஆனால் அடையாள அட்டை அசல் இல்லாத நபர்கள் இந்த நிவாரண தொகையை பெற முடியாத நிலை இருப்பதால்,  அவர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில், மருத்துவர் மூலம் மருத்துவ சான்றிதழ் வழங்கி அதனடிப்படையில் அன்றைய தினமே நிவாரண தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனவே தங்கள் பகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில், குறிப்பிட்ட தினத்தன்று தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படி இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  27.07.2020 ( திங்கள்) - இராமேஸ்வரம்,    28.07.2020 (செவ்வாய்)- கீழக்கரை ,   29.07.2020 ( புதன்) - கமுதி,  30.07.2020 ( வியாழன்) - கடலாடி,  31.07.2020 (வெள்ளி) - ஆர்.எஸ்.மங்களம்,...

அலிகார் சாலை, என் என் பார்க் தெரு பாலம் பழுதுபார்க்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

அலிகார் சாலை, என் என் பார்க் தெரு பாலம் பழுதுபார்க்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

+2 முடித்து பொருளாதாரத்தில் பின்தங்கியவரா?

+2 முடித்து பொருளாதாரத்தில் பின்தங்கியவரா?

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் உயர் கல்வி உதவித் திட்டம் - 2020

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் உயர் கல்வி உதவித் திட்டம் - 2020 விண்ணப்பிக்க https://forms.gle/uEmRLXVp4DuYk1iF9 1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 600 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது. 2. விண்ணப்பங்கள்யாவும் வரும் ஆகஸ்ட் 15- 2020 (15/08/2020) க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். 3. விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனிதநேயம் கொண்ட நவாஸ்கனி எம்.பி அவர்களின் இந்த அறிவிப்பை இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும். அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை. இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறு...

கலை, அறிவியல், மேலாண்மை மற்றும் கணக்கியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான பதிவு இது.

தென்னகத்தின் அலிகார் என்று போற்றப்படும், தேசிய அளவில் 54-வது (NIRF Ranking) இடத்தை பெற்றிருக்கும், 70 வருட பாரம்பரியமிக்க நமது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் உங்களது மேற்படிப்பை தொடர விரும்பினால் உடனே  https://jmc.edu/admission2k20.php என்ற லிங்கின் மூலம் உங்களது அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொள்ளவும். ஆன்லைன் மூலமாக மட்டுமே சேர்க்கை நடைபெறும். இமாம், பள்ளியில் வேலை செய்பவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள், 100% ஜகாத் பெற தகுதியானவர்கள் லின்  குழந்தைகள் யாரேனும் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும் (இன்றிலிருந்து பத்து  நாட்களுக்குள் மட்டும்)  இன்ஷா அல்லாஹ் அவர்களின் மதிப்பெண், விரும்பும் பாடம் மற்றும் தகுதியின் அடிப்படையில் கல்லூரியில் இடமும், கல்வி உதவித்தொகையும் செய்ய இசைந்து உள்ளோம்.  இறைவனின் பொருத்தத்தை நாடி... வரு. ஜலாலுதீன், பொது செயலாளர், JMC முன்னாள் மாணவர்கள் சங்கம், குவைத் பிரிவு. +(965) 9717 9818